search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் தற்கொலை"

    • கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.
    • இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

    இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜானகிராமன் (வயது 17). பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

    பிளஸ்-1 தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×